டிஜிட்டல் மயமாகி கொண்டிருக்கும் இந்த வேளையில் கல்வி துறையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது . கரும்பலகையில் எழுதி வந்த காலம் குறைந்து இப்போது “Smart Class” என்ற நுட்பம் பெரும்பாலான இடங்களில் பரவலாக இருந்து வருகிறது .
அதையும் தாண்டி இப்போது கரும்பலகையையே  டிஜிட்டல் தொழில் நுட்பம், “Scribit” என்ற  புதிய பரிமாணத்தை அடைய செய்துள்ளது.

Scribit:
  • பலகைகள் , சுவர்கள் என எந்த சமதள பரப்பிலும் எழுத்து மற்றும் படங்களை அசத்தலாக வரையும் திறன் கொண்டது இந்த  Device. Computer அல்லது  Mobile Phone (Android etc...)  செயலி (Application)  வழியாக இந்த கருவியை இயக்க முடியும் .
  • எழுத வேண்டிய , வரைய வேண்டிய படங்களை அதில் பதிந்து விட்டால் அப்படியே கரும்பலகையில் வேகமாக எழுதி விடும் .
  • இடமும் வலமுமாக வேகமாக இயங்கும் இந்த கருவி எழுதி அழிக்ககூடிய மை நிரப்பிய நான்கு வண்ண எழுதுகோள்களால் பொருத்தப்பட்டுள்ளன . இதிலேயே அழிப்பானும் இருப்பதால் எழுதியதை அழித்து புதிய எழுத்துக்களை எழுத முடியும் .
  • இரண்டு ஆணி அடிச்சு இந்த கருவியை கரும்பலகையுடன் எளிதில் பொருத்தி விட முடியும் . வகுப்பில் ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கப் போகும் இந்த கருவியின் விலை ரூ.16ஆயிரம் .